வவுனியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் அவசர கலந்துரைடயாடல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கூட்டத்திற்கு வருகை தந்த போது ஊடகவியலாளர் குறித்த கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,
மக்களினுடைய தற்போதைய நிலை, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் தொடர்பான தற்போதைய நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டவுள்ளது என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.