கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்ற த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.