நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்குக் கடந்த வியாழக்கிழமை வந்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார்.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், புதிய அரசமைப்பை வரைவதற்கும் உறுதியான அரசை உருவாக்குவது முக்கியம் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.